Saturday, August 29, 2009

ஆவியைப் புகைப்படம் எடுத்ததாக சிலர் கூறுவது உண்மையா?




சுத்த கப்ஸா! ஆவி இருக்கிறது என்பதெல்லாம் சும்மா! பின் எப்படி அந்த வெள்ளை உருவம் புகைப்படத்தில் வந்தது என்று கேட்கிறீர்களா? ஒருவரை ஒரு நாற்காலியில் நீண்ட நேரம் உட்காரவைத்தால், அவரது உடலிலிருந்து வெளிவரும் மின்கதிர் அலைகள் அந்த இடத்திலேயே இருக்கும். அதை ‘Infrared photography’ முறையில் புகைப்படம் எடுத்தால் அந்த நாற்காலியில் வெள்ளையாக ஓர் உருவம் புகை போலத் தெரியும்.

நாற்காலியில் உட்கார்ந்து இருந்தவரின் மின்கதிர் அலைகள் அவர் எழுந்து சென்ற பின்பும் எப்படி நாற்காலியில் தங்கியிருக்கிறதோ, அதேபோல் இறந்தரின் மின்கதிர் அலைகளும் அவரது வீட்டில் தங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவரின் மின்கதிர் அலைகள் அவர் இறந்தபின்னும் நீண்ட நாட்கள் அந்த வீட்டில் இருக்கும். இதுதான் ஆவியாக புகைப்படத்தில் தெரிகிறது.


நன்றி:
www.keetru.com