Monday, July 13, 2009

கோபத்தை ஏற்படுத்தும் மரபணு!

அளவுக்கு அதிகமாக கோபத்தை ஏற்படுத்தும் மரபணு:
அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு.

சிலருக்கு சில விஷயங் களில் கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கு ஒருவித மரபணுதான் காரணம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சிலர் எதையாவது போட்டு உடைக்கிறார்கள். கண்முண் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். அதே விஷயத்தில் வேறு சிலர் நிதானத்தை இழக்காமல் செயல் படுகிறார்கள். இது ஏன் என்பது குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் மானக் என்ற டாக்டர் ஆய்வு நடத்தினார். 531 பேரிடம் கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அவர் சிலருக்கு மூக்கு மேல் கோபம் வருவதற்கு அவர்களது மூளை செல்களில் உள்ள மரபணுதான் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறார்.

மூளை செல்களில் செரோட்டோனின் என்ற ரசயான திரவம் உள்ளது. இந்த திரவம்தான் மரபணுவின் செயல்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இந்த மரபணு செயல்பாட்டின் மாறுதல்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. பெரியவர்களாக வளர்ந்ததும் இந்த மாற்றம் கோபத்தை கட்டுப் படுத்துவதையும் வெளிப்படுத்துவதையும் நிர்ணயிக்கிறது. பெரும்பாலும் ஆண்களிடம்தான் இந்த மரபணு மாற்றம் காணப்படுகிறது.

ஏற்கனவே இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகள் எம்.ஏ.ஓ.ஏ. என்ற மரபணுதான் இந்த கோபத்துக்கு காரணம் என்று தெரிவித்து இருந்தன.

நன்றி
http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&

No comments:

Post a Comment