Wednesday, July 8, 2009

ஜோதிடம் உண்மை(?) என்ன?

இன்று பல மக்களாலும் பல தேவைகளுக்காகவும் ஜோதிடம் பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு குழந்தை பிறந்த நாளில் இருந்து இறக்கும் வரைக்கும் ஜோதிடம் பார்க்கப் படுகிறது. இதனால் எத்தனையோ பேரின் வாழ்க்கை வீணாய் போயிருக்கிறது. ஏழிலை செவ்வாய்,எட்டிலை சனி என்று எத்தனையோ பேர் ஜோதிடத்தை நம்பி திருமணம் செய்யமல் இருக்கிறார்கள். வாழவேண்டிய வயதில் எத்தனையோ பேர் முதிர் கன்னிகளாக இருக்கிறார்கள். ஜோதிடத்தை நம்பி,சகுனம் பார்த்து வருத்தத்திற்கு மருந்து வாங்க கூட நாள் பார்க்கிறார்கள் பொன்னான பொழுதுகளை வீணாக்குகிறார்களே இது ஏன்? ஜோதிடம் உண்மைதானா? ஜோதிடம்அதிலும் பலவகையாக.... தினசரி பலன்,மாத,வருட பலன், கைரேகை,கிளி ஜோதிடம்,எண்சாத்திரம்,குறிப்பு,வாக்கு சொல்லுதல் போன்றவையாகும்.ஆனால் இவையெல்லாம் உண்மைதானா அல்லது வியாபார நோக்கில் மக்களை ஏமாற்றி செயற்படுகிறார்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஜோதிடம் என்ன என்பதை பற்றி சிந்தித்து பார்ப்போமா?

உதாரணமாக சிலர் தினப்பலன்களை பார்க்கிறார்கள்,அதில் சிவப்பு சட்டை போடணும் என்றால் போடுகிறார்கள். உண்மையில் தினப்பலன் என்றால் என்ன சரிதானா என்று பார்ப்போமா?

தினப்பலன் ஒவ்வொரு ராசிக்கும் சந்திரனின் சஞ்சாரத்தை மட்டுமே வைத்துக்கணிக்கப்படுகிறது. அப்படியாயின் பன்னிரண்டு ராசியிலும் பல கோடிப்பேர் இருப்பினம். இவர்கள் ஒவ்வொருத்தருக்கும் சரிவருமா?

மற்றது கைரேகை பார்க்கிறார்கள். கைரேகை என்பது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஏற்படும் சுருக்கங்களே(கையை பொத்திவைத்திருப்பதால் ஏற்படுவது) இதை வைத்து எப்படி ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்க முடியும்? இதை நம்புவது முட்டாள் தனமில்லையா?

ஜோதிடத்திற்கு வருவோம். ஜோதிடம் என்பது ஒரு ஊகமே தவிர விஞ்ஞானம் அல்ல, ஆதாரம் இல்லாத எதையும் நம்பமுடியாது. அதனால் எனது கருத்து ஜோதிடம் என்பது பொய்மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதே. இதற்குரிய காரணங்கள்

1.ஜோதிடமானது பூமியை மையப்படுத்தி அதை ஜீவமையம் என்கிறது இது அடிப்படத்தவறு ஏனேன்றால் சூரியனை மையப்படுத்தித்தான் கோள்கள் சுற்றி வருகின்றனவே தவிர பூமியை மையப்படுத்தி அல்ல.

2.ஜோதிடத்தில் நவக்கிரகம் என்கிறார்களே அப்படிக்கிடையாது நவக்கிரகத்தில் யுரேனியம்,நெப்டியூனஸ்,புளூட்டோ கிடையாது ஏனென்றால் அவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் தான் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.

3.சூரியனை கிரகம் என்கிறார்கள் இதுவும் தவறு அது ஒரு நட்சத்திரம்.4.சந்திரனையும் கிரகம் என்கிறார்கள் அதுவும் தப்பு. சந்திரன் ஒரு துணைக்கோள்.

5.ராகு,கேதுவை சாயாகிரகம் என்கிறார்கள் அதாவது நிழல் கிரகம் அப்படியென்றால் நிழலுக்கு பயப்பட வேண்டுமா?

6.பிறந்தநேரம் பார்ப்பார்கள். நான் சொல்றேன் பிறந்தநேரம் கூட உண்மை கிடையாது. ஒரு தாய்க்கு பிரசவ வலி வந்தபின் பத்து படிநிலைகளைத்தாண்டித்தான் குழந்தை வெளியே வரும்.அப்ப குழந்தை வெளியே வரும் போது தலை சுற்றி குழந்தையை வெளியே எடுப்போம் பின் தொப்புள் கொடியை வெட்டுவார்கள், பின் துடைப்பர்கள் அதுக்கு பிறகு ரோக்கன் கட்டுவார்கள்,பின் அம்மாவிடம் தாய்ப்பால் குடிக்குமா என பார்ப்பார்கள்.

ஒரு வைத்தியசாலையில் ஒரு இரவு எத்தனை குழந்தை பிறக்கும் தெரியுமா? உதாரணத்துக்கு பத்து குழந்தை பிறந்தால் இந்த பத்து பிரசவத்திற்கும் திடீரென emergency cisarian system இல் தூக்கிப் போட்டுத்தான் குழந்தையை வெளியே எடுப்போம். அதுக்குப்பிறகு ஒரு தேனீர் ஏதும் குடித்திட்டு வந்துதான் குழந்தைகளின் நேரத்தை கணிப்பார்கள். இதையா பார்க்கிறீர்கள். அதைவிட உள்ளூர் நேரம்,சர்வதேச நேரம் இருக்கு பெரிய நாடுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நேரம் அப்படியெனில் அடிப்படைக்கருத்தே பொய்யல்லவா?

சுவாமி விவேகானந்தர் சொன்னார் ஒரு மனிதனுடைய பலவீனத்தை தான் ஜோதிடம் மீது வைக்கும் நம்பிக்ககையை சொல்கிறார் தொடர்ந்து சொல்கிறார் தயவு செய்து ஓய்வெடுங்கள் ,தூங்குங்கள், வைத்தியரை பாருங்கள் என்று.

அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் என்ன சொல்கிறார் தெரியுமா? ஜோதிடம் பார்த்த மன்னன் போர்க்களம் போனானா? ஜோதிடம் பார்த்தே செத்துப்பொடுவன் என்று சொல்லி இருக்கிறார்.

புத்தர் ,சாந்தி,சடங்கு,நேரம்,நட்சத்திரம் பார்த்தால் வாழ்க்கை உருப்படாது அழிந்துபோகும் என்றார்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுண்பொருள் காண்பது அறிவு

அறிவை மட்டுமே நம்புவோம்.

1 comment:

  1. வரவேற்க வேண்டிய பதிவு, உலகத்தை இறைவன் இயக்கிக் கொண்டிருக்கிறான், வாழ்க்கையை நம் கையில் விட்டு விட்டான் அதை நாம்தான் இயக்க வேண்டும், எங்கோ மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஜோதிடனிடமல்ல இதுபோன்ற நம்பிக்கையூட்டும் பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete